(புதியவன்)
உயிரிழந்த ஒருவரை வைப்பகத்துக்கு அழைத்து வந்து அவரது பெயரில் கடன்பெற முயன்ற பெண் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
68 வயதான உயிரிழந்த உறவினரை குறித்த பெண் சக்கர நாற்காலியில் வைப்பகத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
இவ்வாறு அவரை அழைத்து வரும் போதே அவரது தலை தொங்கியிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தமை தெரியவந்தது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.