(மாதவன்)
கணபதிப்பிள்ளை அன்னை பூபதி அம்மா அவர்களது 36-வது நினைவு தினம் நேற்று (19) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வை திருகோணமலை ஒன்றிணைந்த சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு நகரின் மாமாங்க ஈஸ்வரர் ஆலயம் முன்பாக மார்ச் 19, 1988 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னையார் 1988 ஏப்ரல் 19ல் உயிர் துறந்தார்.
அன்னை பூபதி மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் பெரும்திரளானவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.