நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள்
புதியவன்
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு குறித்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் - இவ்வாறு இன்று நடந்த நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
400 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற தொரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தென் கையிலை ஆதீனகுரு அகத்தியர் அடிகளார் தலைமையில் வடக்கு - கிழக்கு பகுதி சிவனடியார்கள், திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் ஞானசம்பந்தர்
அருளிய பாடல்களைப் பாடி நினைவேந்தலை செய்தனர்.
இந்த ஆண்டு முழுவதும் கோணேஸ்வரம் அழிக்கப்பட்டமை தொடர்பான நினைவு தினத்தை கோணேஸ்வரர் ஆலயம், இலங்கை பூராகவுமுள்ள சைவ அமைப்புகளை இணைத்து முன்னெடுப்பதற்கு தென் கையிலை ஆதீனகுரு அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா. நந்தகுமார் உரையாற்றும்போது, கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்படுவதற்கு முன்னர் அழிக்கப்பட்ட வரலாற்று செய்திகளையும் இலங்கை மக்களின் தலைமை கோவிலாக கோணேஸ்வரம் இருந்ததையும்ஆலயம் அழிவதைத் தடுப்பதற்கு அந்தக்காலத்தில் திருகோணமலை வாழ் சைவத்தமிழர்கள் செய்த தியாகத்தையும் நினைவுகூர்ந்தார்.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவனடியார்களின்முக்கிய தீர்மானங்களாக, கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு குறித்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
நாடளாவிய ரீதியில் கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு கொண்டு செல்லப்படவேண்டும். இளையோரிடையே ஓவிய - பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு விதத்தில் இந்தஆண்டு முழுவதும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனப் பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.