தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு திருமலையில் இன்று விசாரணை
தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு திருமலையில் இன்று விசாரணை

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு களை ஆட்சேபித்து திருகோணமலை நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குஇ எம்.ஏ.சுமந்திரனின் நிலைப்பாட்டை அறிவதற்காக ஏப்ரல் 5ஆம் திகதி யான இன்றுவரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில்இ இன்றையதினம் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஜனவரி 21மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவுகளை இரத் துச் செய்யக்கோரிஇ திருகோணமலை யைச் சேர்ந்த ஒருவரால் திருகோண மலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இடைக்காலக் கட்டாணை வழங்கப்பட்டிருந்தது வழக்கு இறுதியாக விசாரணைக்கு எடுக் சுப்பட்டபோதுஇ மாவை சேனாதிராசன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரண். ச குகதாசன் சீ யோகேஸ்வரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே.வி.நவ பதி ராசாஇ புவிதரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கில் வழங்கப்பட்ட கட்டாணையை நீடிக்கவேண்டுமென வழக்காளி சார்பில் முன்னிலையாள ஜனாதிபதி சட்டத்தரணி கணஜெப்ரி அழகரட்ணம் கோரினார்.
இதற்குப் பதிலளித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கே.வி தவராசாஇ இது சாதாரண எல்லைஇ காணிப் பங்கீட்டு வழக்கல்ல. ஓர் இனத்துடன் தொடர்புடைய. பாரம்பரிய கட்சியுடன் தொடர்புடைய வழக்கு இந்த வழக்கைத் தொடர்ந்து  நீடிக்கவோஇதொடர்ந்து நடத்தவோ நாம்  தயாரில்லை. இதனால் இனநலனின் அடிப்படையில் வழக்கை முடித்துஇ கட்சியை இயங்கச் செய்வதற்காக சிலவிட்டுக் கொடுப்புகளைச் செய்யவும் தயாராக இருக்கிறோம். வழக்காளிகள் கோரும் தெ நிவாரணங்களை வழங்க நாம் தயாராக இருக்கிறோம். தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி நடந்ததா றி லேயே இந்த நிலைமை வந்தது. சிறீதரன் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இந்த வழக்கே வந்திருக்காது ஆனால் சிறீதரன் பெரும்பான்மையான வாக்குகளால் வென்றார். அவர் அந்த வெற்றியையும் துறந்துஇ கட்சியை மீள இயங்கச் செய்ய விரும்புகிறார். அதனால் தலைவர் தெரிவையும் மீள நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று மன்றுரைத்தார். 
மூன்றாம் மற்றும் ஐந்தாம் பிரதிவாதி களான ப.சத்தியலிங்கம் மற்றும் எக்ஸ் குலநாயகம் ஆகியோர் ஏனைய பிரதிவா திகளின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போவதாக மன்றில் தெரிவித்தனர்.
வழக்கிலுள்ள ஏழு பிரதிவாதிகளில் ஒரு வரான சுமந்திரன் இறுதியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் முன்னிலையாகி யிருக்கவில்லை. அவர் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகவும் இல்லை. எனவேஇ அவரது நிலைப்பாட்டை அறிய ஏப்ரல் 5ஆம் திகதி வரை (இன்றுவரை) வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்த வழக்கு இன்று விசார ணைக்கு எடுக்கப்படுகின்றது.
சுமந்திரனும் ஏனைய எதிராளிகளின் கருத்தோடு இசைவதாக மன்றில் தெரி வித்தால் வழக்கு இன்றுடன் சுமுகமாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படு கின்றது. எனினும் வவுனியாவில் நடந்த கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில்இ வழக்கை வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனைக் கட்சியினர் கோட் டைவிட்டுவிட்டனர். இதனால் நான் ஒரு சமர்ப்பணத்தை நீதிமன்றில் முன்வைப்பேன். ஆனால் அது எப்படியான சமர்ப்பணம் என்று இப்போது சொல்லமாட்டேன்" என்று சாரப்பட சுமந்திரன் தெரி வித்திருந்தார். இதனால் இன்றைய வழக்கு விசாரணையில் எவ்விதமான சமர்ப்பணத்தை முன்வைக்கப்போகிறார்? இதனால் வழக்கு மேலும் இழுபறியாகுமா? அல்லது வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா? என்று தமிழரசுக் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

99 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.