புதியவன்
நாம் எது நடக்கும் என்று எதிர்பார்த்தோமோ, துரதிஷ்டவசமாக அதுவே நடந்து விட்டது. அது கவலைக்குரியது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியில் அரச தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் எதிராளிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சீ. யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னிலையானார்.
நேற்றைய வழக்கில் எதிராளிகளில் ஒருவரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இந்த வழக்கு தொடர்பில் தனது ஆட்சேபனையைச் சமர்ப்பணமாக எழுத்தில் சமர்ப்பித்ததையே இவ்வாறு விசனத்துடன் சுட்டிக்காட்டினார் தவராசா.
'சில விட்டுக்கொடுப்புக்களைக் கொடுத்து, கட்சியை நிமிரச் செய்வதற்காகச் சில விடயங்களைக் கடந்த தவணையின்போது நாம் முன்னெடுத்தோம்.
நாம் எது நடக்கும் என்று எதிர்பார்த்தோமோ துரதிஷ்டவசமாக அதுவே நடந்து விட்டது.
யாராவது எதிராளி வந்து ஆட்சேபனை தெரிவிக்காமல் இருந்திருந்தால் வழக்கு முடிவடைந்திருக்கலாம். ஆகவே, எதை நாம் எதிர்பார்த்தோமோ அது நடந்து விட்டது.
அது மிகவும் கவலைக்குரிய விடயம். எதிர்வரும் 24 ஆம் திகதி நாம் ஆட்சேபனை சமர்ப்பிக்க வேண்டும். அதைச் சமர்ப்பிப்போம்.' என்றார் தவராசா.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.