கிழக்கு சீனக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலியானதுடன் மேலும் 6 பேர் காணவில்லை என ஜப்பானிய கரையோர காவல்படை இன்று தெரிவித்துள்ளது.
ஜப்பானின் கட்டுப்பாட்டிலுள்ள சேன்ககு தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பகுதியிலே மேற்படி படகு கண்டுபிடிக்கப்பட்டது.இத்தீவிற்கு சீனாவும் உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படகு எங்கு கவிழ்ந்து என்பது தெரியவில்லை. அத்தோடு நீரில் அடித்துவரப்பட்ட நிலையில் சேன்ககு தீவுகளுக்கு அருகில் நேற்று இப்படகு அவதானிக்கப்பட்டதாக ஜப்பானிய கரையோர காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை இப்படகில் ஒரு தாய்வான் பிரஜை உட்பட ஆறு இந்தோனேசியர்களும் பயணித்தனர் என தெரிவித்துள்ள அதேசமயம் படகின் உட்புறத்தில் சடலம் ஒன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அச்சடலத்திலிருந்த அடையாள அட்டையின்படி, உயிரிழந்தவர் இந்தோனேசிய பிரஜை என தெரியவந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.