மாதவன்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் "நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்துக்காகப் போராடுவோம் என்னும் கருப்பொருளிலான மே தின கூட்டம் இன்று புதன்கிழமை(01) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதகேரத் கலந்து கொண்டார்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளர் இ. சந்திரசேகரம், மதத்தலைவர்கள், மகளிர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், இணைப்பாளர், தோட்டதொழிலாளர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.