(புதியவன்)
பாடசாலை மாணவர் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கை கலப்பாக மாறியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி - மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியின் பின்னர் இரு மாணவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் துடுப்பாட்ட மட்டையால் தாக்கியதில், மாணவன் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 13 வயதுடைய மாணவர் எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயது மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் பொறுப்பெடுத்து, நாவலப்பிட்டி நீதிவான் முன்பாக முன்னிலைப்படுத்தினர்.
அதனையடுத்து, குறித்த மாணவனை மே மாதம் 6 ஆம் திகதி வரை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவின் பொறுப்பில் வைக்குமாறு நீதிவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.