வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை நடு நிசி நேரமான அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றது.
இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு நடுநிசி இரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள் பெருங் கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்கு சென்று வெள்ளை துணியினால் வாய்கட்டப்பட்ட மண் குடத்தில் கடல் நீர் எடுத்து வந்து விசேட பூஜை வழிபாடுகள் நடாத்தி ஆலய மூலஸ்தானத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை வரையான ஒரு வார காலத்திற்கு கடல் நீரில் விளக்கெரித்து பொங்கல் பொங்கும் சம்பிரதாயபூர்வ வைபவம் இடம்பெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி கண்ணகி அம்மனுக்காக பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
காலாதிகாலமாக தொன்றுதொட்டு இட்ம்பெறும் குறித்த நிகழ்வு மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.