மாதவன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்றுத்திங்கட்கிழமை (22) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இதில் கண்ணகியம்மன், விநாயகர்,முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகத்தினை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.
இதன்போது கண்ணகியம்மன் தேர்த்திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. அச்சேலை ஒன்றுக்கு 16இலட்சம் ரூபா கொடுத்து பக்தரொருவர் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.