(இனியபாரதி)
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி பங்குனி உத்தர நன்னாளில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி காலை கும்பாவிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமாகவுள்ளதுடன் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் 24 ஆம் திகதி மாலை 2.00 மணி வரை அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்த முடியும்.
இதேவேளை பங்குனித்திங்கள் 12ம் நாள் (25.03.2024)ம் திகதி திங்கட்கிழமை பௌர்ணமி திதியும் உத்தர நட்சத்திரமும் சித்த யோகமும் பாலவ கரணமும் இடப லக்கினமும் பொருத்திய காலை 9.25 மணி தொடக்கம் காலை 10.33 மணி வரையுள்ள சுப முகூர்த்தத்தில் சபரிவாசமேத துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெறவுள்ளது.
அன்று காலை 6.00 மணி தொடக்கம் 7.10 மணி வரை இராஜகோபுர கும்பாவிஷேகமும் காலை 9.25 மணி தொடக்கம் 10.33 மணி வரை மூலாலய கும்பாவிஷேகமும் நடைபெறவுள்ளது.
இத்துடன் துர்க்கா தேவியின் பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தவர்களுடன் தமிழ் கலாசார முறைப்படி வருகை தந்து வழிபாடாற்றுமாறு ஆலய தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுதல் விடுத்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.