அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் குறித்த மாணவன் பாலியல் ரீதியாக வன்புணர்வு முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது. இரு வாரங்கள் கழிந்த நிலையிலும் பாடசாலைத்தரப்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தவேளை குறித்த மாணவனிடம் பொலிஸார் வாக்குமூலம் எடுத்துள்ளனர். இருப்பினும் குறித்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எந்தத் தரப்பினரும் தமக்கு உதவி செய்ய முன் வரவில்லை என கண்ணீர் மல்க தாயார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.