களுத்துறையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களின் முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் இருந்து 6 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் அவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1080 போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.