ராஜஸ்தான் மாநிலம், ரத்தங்கத்தில் உள்ள தனியார் வைத்திய சாலையில் 2 இதயங்கள், 4 கைகள் மற்றும் கால்களுடன் கடந்த 5 ஆம் திகதி அதியசக் குழந்தையொன்று பிறந்துள்ளது.
19 வயதான கர்ப்பிணியொருவருக்கே குறித்த குழந்தை பிறந்துள்ளதாகவும் எனினும் அக்குழந்தை பிறந்து 20 நிமிடங்களில் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்து வைத்தியர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ” இப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. எனினும் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் பிரசவம் செய்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.