ஆதவன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு இன்று வரவுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை தொடக்கம் நாளைமறுதினம் 6ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரையில் ரயில் கடவைக் காப்பாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
வடக்கு - கிழக்கு ரயில் கடவை காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் ராஜ்குமார் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.
மாதம் 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளத்துக்கே நாம் பணியாற்றுகின்றோம். பொலிஸாரின் அடிமைகளாகவே எங்களை இன்னமும் வைத்திருக்கின்றார்கள். இப்போதைய பொருளாதார நிலைமையில் இந்தச் சம்பளம் போதாது இதை வலியுறுத்தியே பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றோம்' என்றார் ராஜ்குமார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.