வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளின் அசமந்த போக்கு! புதுக்குடியிருப்பு தேராவில் குளத்தை அண்டிய பல வீடுகளுக்குள் வெள்ளம்! செய்வதறியாது நிர்க்கதியில்  பல குடும்பங்கள்!
வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளின் அசமந்த போக்கு! புதுக்குடியிருப்பு தேராவில் குளத்தை அண்டிய பல வீடுகளுக்குள் வெள்ளம்! செய்வதறியாது நிர்க்கதியில்  பல குடும்பங்கள்!

 (செல்வன்)

 


வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் குளத்தின்  மேலதிக நீர் வெளியேறுவதற்க்கான வழிகள் மறிக்கப்பட்ததால் குளத்தின் நீர் நிரம்பி குளத்தினை அண்டிய பகுதிகளில் வசிக்கும்  மக்கள் கனமழை ஓய்ந்து 15 நாட்கள் கடந்தும்   இன்றும் வெள்ளத்துக்குள்  வாழ்ந்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு  வீதிகள் குளத்து நீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

தேராவில் குளக்கரையினை அண்டிய 10 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேராவில் முதன்மை வீதி குளத்து நீரினால் மூழ்கி காணப்படுவதால் வீதியால் செல்லமுடியாத நிலை காணப்படுவதுடன் கிராமத்திற்கு செல்லும் சிறு வீதிகள் பலவும்  குளத்து நீரினால் மூழ்கியுள்ளதால் அந்த  வீதிகளாலும் செல்ல முடியாத வகையில்  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேராவில் குளம் விவசாய செய்கைக்கு உட்படுத்தப்படாத குறிப்பாக வயல் நிலங்கள் அற்ற மூங்கிலாறு,தேராவில் கிராமத்திற்கு பொதுவாக காணப்படும் ஒரு சிறிய குளம் ஆகும் இந்த குளத்தினை  மீன்பிடி நடவடிக்கைக்காகவும்   நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்காகவும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும்  வகையிலும் மக்கள் பயன்படுத்துகின்றனர்

இந்த குளக்கட்டின் மேலாகவே பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதி அமைந்திருந்தது. குறித்த குளத்தின் மேலதிக நீர் வெளியேறக்கூடிய வகையில் குளக்கட்டில் பாலம் அமைக்கப்பட்டு மேலதிக நீர் அருகிலுள்ள தேக்கங்காட்டின் ஊடாக வெளியேறி பிரமந்தனாறு  குளத்துக்கு  செல்வது வழமையாக இருந்தது.

இவ்வாறான  நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு மழை காலத்தில் குறித்த குளக்கட்டில் வாகனம் ஒன்று பழுதடைந்து வீதி தடைப்பட்டபோது  அருகில் இருந்த தேக்கங்காட்டின் ஊடாக தேக்க மரக்கன்றுகள் அகற்றப்பட்டு தற்காலிகமாக வீதி ஒன்று  உருவாக்கப்பட்டது

2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த தேக்கங்காட்டு பகுதியில் இலங்கை இராணுவத்தின் 681 வது படைப்பிரிவினர் நிலைகொண்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதோடு  தேக்கங்காட்டின் ஊடாக தேக்க மரக்கன்றுகள் அகற்றப்பட்டு தற்காலிகமாக  உருவாக்கப்பட்ட வீதியே நிரந்தர பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியாக காபற்  இட்டு செப்பனிடப்பட்டுள்ளது இந்த புணரமைப்பு பணியின் போது வீதி நிலமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டதோடு  தேராவில் குளத்தின்  மேலதிக நீர் வெளியேறுவதற்க்கான பாலம் எதுவும் அமைக்கப்படவில்லை.
 
இந்நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த  கன  மழையினால் ஏற்பட்ட  வெள்ளத்தினால் குளத்தின் மேலதிக நீர் வெளியேற வழியில்லாததால் குளம் நிரம்பி அதனை அண்மித்த மக்களின் காணிகள்,வீடுகள்,வீதிகளுக்குள் குளத்து நீர் சென்றுள்ளதால் மக்கள் இன்று  தங்கள் அன்றாட வாழ்வினை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தேராவில் கிராமத்திற்கு செல்லும் முதன்மை வீதி மற்றும் மூங்கிலாறு கிராமத்திற்குள் செல்லும் சிறு வீதிகள் இரண்டு என்பன குளத்து நீரில் மூழ்கியுள்ளன. இரண்டு கோவில்கள் குளத்து நீரில் மூழ்கியுள்ளன.
குளக்கரையில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்று முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் குளத்திற்கு கிழக்காக கட்டப்பட்டுவரும் புதிய பிள்ளையார் கோவில் ஒன்றும் நீரில் மூழ்கியுள்ளன.

குறித்த குளத்தின் மேலதிக  நீரினை வெளியேற்ற முடியாத நிலையில் குறித்த குளம் தற்போது காணப்படுகிறது  பாரிய மழைவெள்ளம் ஏற்பட்டு  இன்று 15 நாட்களுக்கு மேலாக மக்கள் இவ்வாறான அவல வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

குளத்தினை அண்மித்த கிழக்கு,தெற்கு,மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் குளத்து நீர் புகுந்துள்ளதால் வீடுகளுக்குள் இருக்கமுடியாத நிலையில் சில குடும்பங்கள் காணப்படுவதுடன் மலசகூடங்கள்,கிணறுகள் அனைத்து நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன இதனால் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதில் கூட சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மூன்று குடும்பங்கள் இன்றும் தங்கள் வீடுகளுக்குள் இருக்கமுடியாத நிலையில் உறவினர்களின் வீடுகளில் தங்கி வாழ்கின்றார்கள் மேலும் பல மக்களின் காணிகளுக்குள் குளத்து நீர் நீரம்பி காணப்படுகின்றது
பாம்பு,உள்ளிட்ட விசயந்துகளின் தொல்லை காணப்படுவதாகவும் இவ்வாறன நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்று தெரியா நிலையில் குளத்து நீர் வற்றுவதற்கு இரண்டு மூன்று மாதம் எடுக்கும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மக்களின் நிலை தொடர்பில் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு தெரியப்படுத்தியும் ஒருதடவை வந்து பார்வையிட்டு விட்டு சென்றவர்கள் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள் இந்நிலையில் குறித்த குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றி தம்மை தமது வீடுகளில் நின்மதியாக வாழ வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் ,கிராம சேவையாளர்,பிரதேச செயலாளர்,மாவட்ட செயலாளர், மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 


#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

118 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.