கனடாவின் ரொறன்ரோவில், வீடற்ற நபர் ஒருவரை எட்டு இளம்பெண்கள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்போது அவரது புகைப்படம் முதலான விவரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 18ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ரொறன்ரோவில், யார்க் பல்கலை பகுதியில், 59 வயதுடைய வீடற்ற ஆண் ஒருவரை இளம்பெண்கள் சிலர் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் கூறிய தகவலைத் தொடர்ந்து அந்த நபரைத் தாக்கியவர்களை பொலிசார் கைது செய்தார்கள். அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால் இந்த கொடூரச் செயலைச் செய்தவர்கள் எட்டு இளம்பெண்கள்!
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.