"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாய் யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே”
ஆம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்திலும் அன்பு என்னும் வடிவில் இறைவன் அமர்ந்திருக்கின்றான் என்பது தான் இந்து மதத்தின் தாற்பரியம். மனிதர்கள் பிற மனிதர்களின் பால் செலுத்தும் அன்பில் தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனையே திருமூலர்
“நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மீது அன்பு செலுத்துவார்” என்றார்.
இயற்கையை இறைவனாகப் பாவித்து இயற்கையோடு மனிதனை வாழ வைத்த மதம் நமது இந்து மதம். மனிதன் ஒவ்வொருவரினதும் வாழ்க்கைமுறை பற்றி எடுத்துக்கூறி இறைவனே மனிதனாகத் தோன்றி மக்களை வாழ்வாங்கு வாழ மனித நேயத்தோடு வாழ வலியுறுத்துகின்றது.
“பொங்குபல சமயம் என்னும் நதிகளெல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி எங்கும் கங்குரை காணாத கடலே” என இறைவன் வர்ணிக்கப்படுகின்றான். மனிதனது அகநிலைத் தன்மை வழி ஆன்மீகத்தை நாடி மனிதனை நல்வழிப்படுத்தும் ஒன்றாகவே மதங்கள் காணப்படுகின்றது இந்த வகையில் இந்துமதமானது மனிதநேயப் பண்புகனை முதன்மைச் சிந்தனையாக கொண்டு காணப்படுகின்து.
தாய் மண்ணின் தத்துவமாகவும் கலாச்சாரமாகவும் போற்றப்பட்ட மதச் சிந்தனைகள் இன்றியமையாத மாற்றங்களுக்காகவும் மீள்வலியுறுத்தல்களுக்காகவும் சீர்திருத்தச் சிந்தனைகளின் கரங்களில் தன்னை ஒப்படைக்க வேண்டியிருந்தது. அதன் முக்கிய நோக்கமே மனிதனை பொறுமை, நம்பிக்கை, மன்னிப்பு, அன்பு, போன்ற விழுமியப் பண்புகளுடன் மனிதனாக வாழும் படி வலியுறுத்துகின்றது.
மனிதனது வாழ்க்கை ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கின்றது. சராசரி மனிதனை ஆசை தான் இழுத்துக் கொண்டு செல்கின்றது. அவன் செய்யும் தவறுகளுக்கெல்லாம் காரணமாக இருக்கின்றது. வேண்டும் என்ற எண்ணம் விரிவடைந்து கொண்டு போகுதே தவிர போதும் என்ற உள்ளம் வருவதே இல்லை.
நிரந்தரமான இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை நிரந்தரமான துன்பத்தில் உழன்றவனும் இல்லை. இறைவனுடைய தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றது. தவறுகளின் மூலம் மனிதன் உண்மையை கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் ஆசையைத் தூண்டுவிக்கின்றான். இதனையே
“இடுக்கண் வருங்கால் நகுல அதனை
அடுத்தூர்வ தப்பொதில்”
என்றார் வள்ளுவர் எல்லாச் செல்வங்களையும் இறைவன் யாருக்கும் நிரந்தரமாக கொடுத்ததில்லை. ஒருவனுக்கு நல்ல பசி எடுக்கிறது ஆனால் சாப்பிட உணவு இருக்காது. இன்னும் சிலருக்கு போதுமான அளவு உணவு இருக்கும் ஆனால் சாப்பிட பசி இருக்காது. இன்னும் சிலருக்கு உணவும் இருக்கும் பசியும் இருக்கும் ஆனால் சாப்பிட முடியாத அளவிற்கு நோய் வந்து வாட்டுது. இது தான் மனிதனது வாழ்க்கை.
பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் இல்லை. அடுத்த பாதை என்ன பயணம் என்ன என்பது நமக்கே தெரியாது. எல்லாம் இறைவன் செயல் அவ்வாறிருக்கையில் வீழ்ச்சியில் கலக்கமும் எழுச்சியில் மயக்கமும் கொள்ளாதே என்கிறது. இறைவனின் அவதாரங்களே சோதனைக்கு தப்பவில்லையே. நமது இதிகாசங்களைப் பார்த்தால் புரியும். சோதனைகள் எவரையும் விடாது ஆனால் அந்த சோதனையின் ஊடாக வரலாறு வருகின்றது. அவ்வாறு பல சோதனைகளைத் தாண்டி வாழ வலியுறுத்துகின்றது.
உண்மை உருவாய் நீ உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோட தேசம் வரும்.
ஆகவே மாற்றம் மாறாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் .அம்மாற்றத்தை நமக்கான வாய்ப்பாக உருவாக்கி இந்து மதம் உணர்த்தும் மனிதநேய பண்புகளோடு சிறந்த மனிதர்களாக வாழ்வோமாக…….
தனிஸ்ரா. பாலகிருஸ்ணன்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.