ஒருவரது தோற்றத்தில் கூந்தல் அழகு முக்கியபங்கு வகிக்கிறது. அதனால் தான் கூந்தலை கவனிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முடி பராமரிப்புக்கு சிகைக்காய், எலுமிச்சை, தேங்காயெண்ணெய், வினிகர் போன்ற இயற்கையான முடி பராமரிப்பு பொருள்களை பயன்படுத்துங்கள்.கூந்தலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க சிறந்த வழிகள் சில: .
*தலை குளிப்பதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் எண்ணெய் தடவவும். இதற்கு கடுகு, தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
* தேங்காய்ப்பால் அல்லது தேங்காயெண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.
*பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து குளிக்கலாம்.
*தேனுடன் ப்ரெஷ் ஃக்ரீம் கலந்து முடிக்கு மாஸ்க் போட்டு மந்தமான நீரில் அலசி எடுக்க வறண்ட கூந்தல் நன்கு பொலிவடையும்.
* முட்டை வெள்ளை கரு + தயிர் இந்த ஹேர்பேக்கை கூந்தலுக்கு தடவி 30 நிமிடத்திற்கு பின் சுத்தம் செய்துகொள்ளலாம். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்துவர நல்ல பலன் கிடைக்கும் .
* அரிசி நீரை உச்சந்தலையில் தடவி, மசாஜ் செய்யவும். தலைமுடியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.இது கூந்தலுக்கு குளிர்ச்சியளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
* ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் சீகைக்காய் பொடி, ஒருடேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு கப் தயிர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை கலந்து தலைமுடியில் தடவி 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* 2 ஸ்பூன் சீகைக்காய் பொடியுடன் ஒரு பெரிய டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, தலைமுடியின் வேரில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தலைமுடியை அலச தலைமுடி நன்கு வலுவாகும்.
* சீகைக்காய் பொடியுடன், முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச , தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* சீகைக்காயுடன் தேன் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த முடி நன்கு பொலிவோடு மென்மையாக அழகாக இருக்கும்.
* கற்றாழை ஜெல், விளக்கெண்ணெய் மற்றும் வெந்தய பவுடர் ஆகியவற்றை கலந்து அதை இரவு தூங்கும் முன் தலைமுடியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.இவ்வாறு மாதத்திற்கு 3முறை உயோகித்தால் முடி நன்கு வளர்ச்சி அடையும்.
* முட்டையை நன்கு அடித்து அதில் கற்றாழை ஜெல் மற்றும் பூண்டு சாறு சேர்த்து நன்கு கலந்து கூந்தலில் தடவி வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் தலைமுடியை சுற்றி 30 நிமிடம் கழித்து ஷாம்பு பயன்படுத்திகூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இதை பயன்படுத்த கூந்தல் செழிப்பாக வளரும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.