(புதியவன்)
நெல்லிக்காய் தேநீர் என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் அனைவருக்கும் ஒரு சிறந்த மற்றும் சுவையான பானமாகும். இதில் பல நன்மைகள் உள்ளது. இது விற்றமின் சி மற்றும் ஏ, இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகவே கருதப்படுகின்றது. நெல்லிக்காய் தேநீர் செரிமானத்தை மேம்படுத்தவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும்,இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. இவாறான நன்மைகளைக் கொண்டுள்ள இந்த நெல்லிக்காய் தேநீரை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* 1 தேக்கரண்டி நெல்லிப் பொடி
* 1 கப் தண்ணீர்
* தேன் அல்லது வெல்லம் அல்லது பனங்கல்கண்டு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
2. தண்ணீர் கொதித்ததும் நெல்லிப்பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. 3-5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
4. வடிகட்டி, தேன் அல்லது வெல்லம் சேர்த்து பரிமாறவும். (ஐ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.