ஆதவன்
தலைமன்னார், பியர் பகுதியிலுள்ள பனங்காடு தீப்பற்றி எரிந்துள்ளது. நேற்று நண்பகல் வேளையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
தலைமன்னார், பியர் பகுதியில் உள்ள தனியார் காணியில் உள்ள பனைமரங்கள் திடீரென தீப்பற்றியதையடுத்து பதற்றமடைந்த மக்கள் கடற்படையினருக்குத் தகவல் வழங்கினார்கள். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கடற்படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீவிபத்துத் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (எ )
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.