(புதியவன்)
ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் நாளை (19) முதல் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வரவுள்ளார்.
இந்த பயணத்தின் போது ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க, தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2023 இல், வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, தெஹ்ரான் பயணத்தின் போது வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் இருதரப்பு சந்திப்புக்களை மேற்கொண்டார்..
கலாநிதி அமீர் அப்துல்லாஹியனுடன் அரச தலைவர் அலுவலக வெளியுறவு அமைச்சக, எரிசக்தி அமைச்சக மற்றும் ஈரானின் பிற தொடர்புடைய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.