*உருளை கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.
*மஞ்சளுடன் கருவேப்பிலை சாறு சேர்த்து முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.
*கற்றாழை சாற்றை முகத்தில் உள்ள கரும்புள்ளிகளில் தடவி, 20-30 நிமிடங்கள் வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ கரும்புள்ளிகள் மறையும்.
*சில வெள்ளரிகளை எடுத்துக் கலக்கி அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 20 நிமிடங்கள் வரை விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
*சிவப்பு பருப்பு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கு உதவுகிறது. இதற்கு, இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளே முக்கிய காரணமாகும். சிவப்பு பருப்புகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும். பின் அதை பேஸ்ட் செய்து முகத்தில் 20 நிமிடங்கள் வரை வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.
*மஞ்சளை தண்ணீரில் நன்றாக கலந்து காட்டன் பேட் மூலம் முகத்தில் தடவி 20-30 நிமிடங்களுக்கு வைத்து பின் தண்ணீரில் கழுவலாம்.மஞ்சளில் குர்குமின் இருப்பதால், சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது. இது கரும்புள்ளிகளை மறைத்து சருமத்தை ஒளிரச்செய்கிறது.
*கரும்புள்ளிகள் மீது தயிர் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு, பின் அதை கழுவிவர கரும்புள்ளிகள் நீங்கும். *இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் மறையும்.தயிர்,
*ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து தயிர் சமமாகக் கலந்து, அதனை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மெல்ல மறையும்.இயற்கையாகவே பிரகாசத்தைத் தரக்கூடிய ஒன்றாகும். தோலுரிப்பு மூலம் உண்டான கரும்புள்ளிகளை நீக்குவதற்கு தயிர் உதவுகிறது.
*மஞ்சள் மற்றும் கொத்தமல்லி கியவற்றை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தட வி நன்கு காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும்.
*ஜாதிக்காயை நான்கு மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து பின் அதனை நன்கு அரைக்கவேண்டும். இந்த கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி ஒரு மணிநேரம் விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர கரும்புள்ளிகள் மறையும்.
*காய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல் ஒரு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி போய்விடும்.
* இரண்டு ஸ்பூன் கறிவேப்பிலை சாற்றில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து இரவில் படுக்கப்போகும் முன்கரும்புள்ளிக்ள மற்றும் வடுக்களின் மீது தடவி வர கரும்புள்ளிகள், வடுக்கள் மறையும்.
*தேன் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.சிறிதளவு தேனை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் அது கரும்புள்ளியை அகற்றும்.
*இந்த முறைகள் இயற்கையாக கரும்புள்ளிகளை நீக்குவதற்கான முறைகளாகும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.