(புதியவன்)
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவர் மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
இச் சம்பவத்தில் மனைவி உயிரிழந்தததுடன் கணவன் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு (29) அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் அக்போபுர - 85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.