(யோகி)
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் போராட்டம் ஒன்று பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற இடம்பெற்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் வடக்கு கிழக்கு எங்கும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த போராட்டத்தில் மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர் போராட்டத்தில் ஒரு கூலித் தொழிலாளியின் நாளாந்த வருமானம் 1500 ரூபா ரூபாவாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரிசியின் விலையை 100 ரூபாயிலும் குறைக்குமாறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைக்குமாறு கேட்டு நின்றனர் மேலும் அதிகூடிய விலைவாசியால் பலர் பட்டினி சாவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல உயிர்களை காவு வாங்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து தருமாறு அரசிடம் வலியுறுத்தி கேட்டு கொள்கின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.