(புதியவன்)
வவுனியா - நெளுக்குளம் குளத்தினுள் இன்று (10) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளமையுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
வவுனியா - நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குளக்கட்டின் மேற்பகுதியில் காலணியும் காணப்படுவதினால் இச்சம்பவம் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
குறித்த உயிரிழப்பு தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து முன்னெடுப்பதுடன் சடலத்தை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்
சடலமாக காணப்படும் நபர் மஞ்சள் நிற மேற்சட்டையுடன் சாரமும் அணிந்துள்ளமையுடன் 55 தொடக்கம் 60 வயதுக்குட்டவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.