செல்வன்.
முல்லைத்தீவு- மாமூலையில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை(09) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாமூலை விஸ்ணு கோயில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு உந்துருளிகள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தை சேர்ந்த திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன்(வயது-18) என்ற இளைஞனே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.