புதியவன்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின் கீழான நடப்பாண்டுக்கான சிறுபோக பயிர்ச் செய்கையினை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் நேற்றுப்புதன்கிழமை(10) கிளிநொச்சி பதில் மாவட்ட செயலர் எஸ். முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுமார் 36அடி நீர் கொள்ளளவைக் கொண்ட பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளத்தில் தற்போது 35அடி அங்குல நீர் உள்ளது.
இக் கலந்துரையாடலில் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் விவசாய அமைப்புகளின் பங்குபற்றுதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வலதுகரை வாய்க்கால் பகுதியில் முழுமையாக பயிர் செய்கையினை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. இடதுகரை பகுதியில் இரண்டு ஏக்கர், இரண்டு தொடக்கம் நான்கு ஏக்கர் வரையிலுள்ளவர்கள் இரண்டு ஏக்கரும், நான்கு ஏக்கருக்கு மேற்பட்வர்கள் ஐம்பது வீதமான பயிர் செய்கையினை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், எதிர்வரும் 15ஆம் திகதி பயிர் செய்கைக்கான நீரினை திறந்து விடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர்(காணி), மாவட்ட விவசாய பண்ணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர், கமநல அபிவிருத்தி பணிமனை உதவி ஆணையாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், தொழில்னுட்ப உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாய கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.