மாதவன்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் நீர்ப்பாசன வாய்க்காலிருந்து குடும்பத்தலைவர் ஒருவர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(12) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பெனடிற் பெனிஸ் நிமலன்(வயது- 37) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.