5ஆம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும்,
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
சின்னப்பு கெங்காதரன்
(பிரபல மில், லொறி உரிமையாளர்)
தோற்றம்
01.12.1947
மறைவு
03.03.2018
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஐந்து ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அப்பா அப்பாவென்று
கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அப்பா அப்பாவென்று
பண்போடும் பாசத்தோடும் எமை
பாதுகாத்த எம் தந்தையே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அப்பா!
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
அப்பா உங்கள் நினைவோடே...!
ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது
எங்கள் நெஞ்சம்...!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிராயடி வைரவரும் நுணுவில் பிள்ளையாரினதும்
அருள் கிடைத்திட பிரார்த்திக்கின்றோம் ...
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!!
உங்கள் பிரிவால் வாடும்,
மனைவி, மகன்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்