3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தன்னிடமிருந்து 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வீரர் ஒருவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் நின்றிருந்தபோது இரண்டு நபர்கள் அவருடன் உரையாடி நெருக்கமாக பழகி, அதன் பின்னர் மதுபானத்தை அவருக்கு அருந்தக் கொடுத்துள்ளனர்.
அதனையடுத்து, அவர் போதையில் மயங்கிய நிலையில், குறித்த இருவரும் அவரது 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச்சங்கிலி, கையடக்கத் தொலைபேசி மற்றும் 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.