பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்!
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவுப் பார்சலைக் கொள்வனவு செய்யச் சென்ற போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் முன்னர் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும், அதன்போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.