ஆதவன்.
ஹபரணையில் யானைகளுக்கான தனியார் மருத்துவமனை மற்றும் இனப்பெருக்க நிலையம் என்பன கடந்த வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளன.
அங்கு ரொஷான் என்பவரே யானைகளை வைத்துப் பராமரித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற பெரஹெராவின்போது, இவரது சீதா என்ற பெண் யானை மீது ஊர்காவற்படை சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்த நிலையில் பேராதனைப் பல்கலைக்கழக மிருக மருத்துவ சத்திரசிகிச்சைப்பிரிவினர் சீதாவுக்குச் சிகிச்சையளித்திருந்தனர். தற்போது திருவிழாக்களிலும், கலாசார நிகழ்வுகளிலும் பங்குபற்றுவதற்கு, யானை களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரொஷான் தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.