எழிலன்
அநுராதபுர காலத்து தமிழ் மக்களின் எஞ்சிய வரலாற்றுச் சொத்துகளான ஆலயம்,பாட சாலைகள் என்பவற்றில் தமிழ் மரபுகள் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகின்றன. எஞ்சிய தமிழ்ச் சொத்துகளைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நாம் முயலவேண்டும்.
இவ்வாறு யாழ்.ஊடக அமையத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அநுராதபுர கதிரேசன் ஆலயப் பிரதம குரு ஞானச்சந்திரா குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழ் மக்களில் அநேகமானோர் 1985ஆம் ஆண்டு வன் செயல் காரணமாக பிரதேசத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். தற்போது அநுராதபுரத்தில் எஞ்சிய தமிழர் சொத்துகளான கதிரேசன் கோயில், விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயம், நுவர கர பிள்ளையார் ஆலயம் என்பன அழிக்கப்படும் அல்லது மாற்றப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் திருநீறு பூசுவதற்குத் தடை. ஒன்று கூடலில் இந்துமதப் பிரார்த்தனை இல்லை, மரத்தடியில் சைவசமயப் பாடம் கற்பிக்கும் நிலை என்பன ஏற்பட்டுள்ளன. பாடசாலை மண்டபங்களில் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம் சார்ந்த பெயர்கள் பொறிக்கப்படுகின்றன. அநுராதபுரத்தின் எஞ்சிய தமிழர் சொத்துகளைக் காப்பாற்ற தமிழ்ப் பிரதிநிதிகள் குரல்கொடுக்கவேண்டும் என்றார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.