[புதியவன்]
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்து மினி வேனில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சிறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு மினி வேனில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, குண்டு வெடித்து அந்த வாகனம் சின்னாபின்னமாகியது. இதில்,3 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதல் நடந்ததற்கு பின் ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மினி வேனில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாகவும், இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.