[ஆதவன்]
உலகில் சக்தி வாய்ந்த ஏவுகணைகளாக அறியப்படும், ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளால் உக்ரைன் மீது ரஷ்யா மூர்க்கத் தாக்குதல் நடத்திவருகின்றது. நேட்டோவுடன் உக்ரைன் இணைவதற்கு மேற்கொண்ட முன்னெடுப்புகளைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தப் போர் இடம்பெற்று வருகின்றது.
நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும், மேற்கத்தேய நாடுகளும் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருவதால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்துத் தாக்குப்பிடித்துப் போரிடுகின்றது.
கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைன் மீதான வான் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியிருந்த நிலையில், வான் பாதுகாப்புச் சாதனங்களை அல்லது ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க நேசநாடுகள் முன்வர வேண்டும் என்று உக்ரைனின் அதிபர் ஷெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
நேச நாடுகள் பலவும் ஏவுகணைத் தடுப்புச் சாதனங்களை வழங்குவதற்கு முன்வந்த நிலையில், தடுப்புச் சாதனங்களால் கட்டுப்படுத்தமுடியாத ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
நவீன சாதனங்களை மையப்படுத்தி இந்தப் போர் நகர்வதாகவும் இது ஆபத்தான அறிகுறி என்றும் போரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.