[புதியவன்]
ஜப்பானில் 36 பேரை தீவைத்து எரித்து கொன்ற வழக்கில்,ஒருவருக்கு சாவுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கியோட்டோவின் முன்னணி இயங்கு காட்சியகத்தில் கடந்த 2019ல் நடந்த தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஷின்ஜி அவோபா என்பவர் இயங்கு காட்சியகத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொழுத்தினார்.
வயலட் எவர்கார்டன் மற்றும் தொடர் மற்றும் பிரபலமான படைப்புகளுக்கு பெயர் பெற்ற காட்சியகத்துக்கு எதிராக அயோபா வெறுப்பு கொண்டிருந்தார் என்றும் அவரது நாவலை அந்த நிறுவனம் திருடியது என அவர் கருதினார். இதனால்தான் அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவோபாவுக்கு சாவுத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.