(புதியவன்)
பப்புவா நியூ கினியா மாநிலத்தில் கடுமையான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
இதனால் கடந்த வார இறுதியில் 64 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பப்புவா நியூ கினியாவின் மலைப் பிரதேசத்தில் பழங்குடியின குழுக்களுக்கிடையில் இந்த வன்முறை இடம்பெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் இந்த மாநிலத்தில் நடந்த வன்முறையில் சுமார் 17 பழங்குடியின குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நிலத்தையும் செல்வத்தையும் பகிர்ந்து கொள்வதற்காக பழங்குடியினர் குழுக்கள் போராடுகின்றன.
கடந்த ஆண்டு ஜூலையில், இங்கும் மோதல்கள் அதிகரித்தன, இதன் காரணமாக மூன்று மாதங்களுக்கு இப்பகுதியை முழுமையாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.