(புதியவன்)
பாலஸ்தீன அதிகாரசபையின் தலைமை அமைச்சர் முகமட் சட்டேயே தனது பதவி விலகல் கடிதத்தை பாலஸ்தீன அரச தலைவர் மஹ்மூட் அப்பாசிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதிகரித்து வரும் வன்முறை மற்றும் காசா மீதான போரின் காரணமாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளை ஆளும் தனது அரசாங்கமே பதவி விலகுவதாக பாலஸ்தீன தலைமை அமைச்சர் முகமது ஷ்டாயே அறிவித்துள்ளார்.
பாலஸ்தீன அரச தலைவர் பாலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்து வருகின்ற நிலையில் இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரம் மற்றும் காசா பகுதியில் போர், இனப்படுகொலை மற்றும் பட்டினி ஆகியவற்றின் காரணமாக தாம் பதவி விலகுவதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.