ஆதவன்.
இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டுள்ள மாலைதீவு தற்போது, துருக்கியுடன் இராணுவ ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
மாலைதீவின் தீவுப் பகுதிகளையும், கரையோரப் பகுதிகளையும் ட்ரோன் மூலம் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ட்ரோன்களை இயக்குவதற்கு ட்ரோன் தளமொன்றை அமைப்பது தொடர்பிலும் தற்போது மாலைதீவு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து உறவு இருந்து வந்தாலும், பெரும்பான்மையான விடயங்களில் இந்தியாவுக்கும் துருக்கிக்கும் வேறுபட்ட கருத்து நிலைப்பாடுகளே இருந்து வருகின்றன. தற்போதும்கூட சில விடயங்களில் துருக்கி, பாகிஸ்தான் சார்பு நிலைப்பாட்டில் இருந்துவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இந்தியாவுடனான உறவை அறுத்துக்கொண்டுள்ள மாலைதீவு துருக்கியுடன் ஒப்பந்தத்தைச் செய்துள்ளமை பரபரப்பாகியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.