ஆதவன்.
ரஷ்யாவில் உள்ள எண்ணெய்க்குதங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ஆளில்லா விமானங்களால் தீவிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. ரஷ்யா மீதான வான்வழித் தாக்குதல்களை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது உக்ரைன். குறிப்பாக ரஷ்யாவின் எண்ணெய்க் கிணறுகள் மற்றும் எண்ணெய்க் குதங்கள் என்பவற்றை இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. நேற்றும் ரஷ்யாவின் எரிபொருள் தளங்கள், எண்ணெய்க் குதங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் என்பவற்றின் மீது உக்ரைன் தீவிரத்தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் வான் தாக்குதல் களையடுத்து, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில் ரஷ்யாவின் பெல்கோரோட்டில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 'ரஷ்யாவில் அரசதலைவர்த் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் பலத்தை உக்ரைன் குறை மதிப்புக்கு உட்படுத்தி வருகின்றது. இதற்கு விரைவில் உக்ரைனுக்குப் பதில் வழங்கப்படும் என்று ரஷ்ய இராணுவம் உக்ரைனை எச்சரித்துள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.