(ஆதவன்)
கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள பல்லாயிரம் தென்னைகளில், வெள்ளை ஈக்களின் தாக்கம் தீவிரமாக அவதானிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வறட்சி, வெப்பம் வெள்ளை ஈக்கள் இலகுவாகப் பரவுவதற்கு ஏதுவாக அமைந்துள்ள நிலையில், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்லாயிரம் தென்னைகள் வெள்ளை ஈக்களின் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் அதீத வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வெள்ளை ஈக்களின் தாக்கம் மேலும்மேலும் அதிகரிக்கும் என்று துறைசார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே பொதுமக்கள் மற்றும் பண்ணையாளர்கள் தங்களின் தென்னைகள் மற்றும் இதர பயன்தரு மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
முன்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளை ஈக்களின் தாக்கம் தீவிர நிலையை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் நோய்த்தொற்று தீவிரத்தன்மை அடைந்துள்ளமையானது அடுத்த சில மாதங்களில் வடக்கின் தேங்காய் உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது. (ஏ)
z3xn3w
s4zrap
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.