(புதியவன்)
மஸ்கெலியாவில் உள்ள கார்ட்மோர் தமிழ் உயர்தரப் பாடசாலை மாணவர் ஒருவர் (04)இன்று கொங்கிரீட் தூண் இடிந்து வீழ்ந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இப்பாடசாலையில் ஆறாம் வருடத்தில் கல்வி கற்கும் மஸ்கெலியாவைச் சேர்ந்த 11 வயதுடைய எஸ்.அனிஷன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.அதிகாரிகளின் கூற்றுப்படி, பாடசாலை மைதானத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை தோட்ட மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததாக தெரிவித்தனர்.
பாடசாலை நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றமை சகமாணவர்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.