(புதியவன்)
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தொடர்ந்து, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எத்தகைய அவசரநிலையையும் எதிர்நோக்கி எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதுவர், முகப்புத்தகப்பதிவில், தேவையற்ற ஈடுபாடுகளுக்காக இலங்கையர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை உட்கொண்டுள்ள இலங்கையர்கள் ஏதேனும் அவசரகால சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் நீண்ட காலத்துக்கு போதுமான மருந்துகளை வைத்திருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் போதிய உணவு பொருட்களை வைத்துக்கொள்ளவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் இஸ்ரேலில் பெரும்பாலும் பண்ணை தொழிலாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களாக வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.