புதியவன்
பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்
அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணித்த 9 பேர் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலுசிஸ்தான் மாகாணத்தில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, பிரிட்டன் தனது நாட்டு மக்களுக்கு பயணம் செய்வது ஆபத்தானது என எச்சரிக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இணைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் உட்பட மேலும் 08 நாடுகள், இந்தப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
குற்றம், போர், பயங்கரவாதம், நோய், சீரற்ற வானிலை மற்றும் இயற்கை இடர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ள பல காரணிகளைக் கருத்தில் கொண்டு பிரித்தானியா இந்தப் பட்டியலைத் தயாரிக்கிறது.
இதன்படி ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான், சூடான், லெபனான், பெலாரஸ் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.