(புதியவன்)
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில், பட்டாசு வெடிப்பதால் செல்லப் பிராணிகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, பட்டாசு வெடிப்பது மனிதர்களின் அமைதியை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், வனவிலங்குகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக நாய்கள், பூனைகள் உட்பட பறவைகள் மற்றும் சிறிய பாலூட்டிகளிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாரிய அளவிலான சத்தமானது பறவைகள் பயத்தில் கூடுகளை விட்டு வெளியேறி, அவற்றின் வாழ்விடங்களை சீர்குலைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகள் மனிதர்களை விட மிகவும் நுணுக்கமான கேட்கும் திறன் கொண்டவை.
பட்டாசு விடுக்கும் போது எழுப்பப்படும் ஒலியானது 190 டெசிபல்களை எட்டுகின்ற நிலையில், 75 டெசிபல் ஒலியானது மனித செவிப்புலன் சேதத்திற்கான வரம்பை மீறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒலி விலங்குகளிடையே கவலை, குழப்பம் மற்றும் பீதியை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், 50 வீத நாய்கள் பட்டாசு வெடிக்கும் போது பயம் அல்லது பதட்டத்தை அனுபவிப்பதாக குறிப்பிடப்படுகிறது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.