புதியவன்
இந்தியாவின் நாமக்கல் அருகே சிவன் கோவில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நேற்றுத் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியில் சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் இதர விழாக் காலங்களில் ஏராளமான பக்தா்கள் வருகை தருவர்.
ஒவ்வோா் ஆண்டும் மாசி மாதம் 27, 28, 29 ஆகிய திகதிகளில் சூரியஒளி நேரடியாக கோவில் பிரகாரத்திலுள்ள நந்தி மீதும், அடுத்து உள்பிரகாரத்திலுள்ள சிறிய நந்தி மீதும், கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீதும் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
இதன்படி நிகழாண்டு திங்கள்கிழமை காலை 6.25 முதல் 6.30 வரையில் ஐந்து நிமிடம் சூரியஒளி சிவலிங்கம் மீது விழுந்தது. அதன்பிறகு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரண்டு வழிபாடு மேற்கொண்டனா்.
செவ்வாய்க்கிழமையும் இந்த நிகழ்வு நடைபெறும் என கோவில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.