இனியபாரதி
யாழ்ப்பாணம் - மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நாளைய தினம் புதன்கிழமை மாலை 04 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை திருவிழா இடம்பெற்று, இரவு 08.30 மணியளவில் சப்பரத ஸ்தபதியை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது, சங்குவேலி - பழனி சிற்பாலய ஸ்தபதி ஆசாரி சரவணபவன் அருளகனுக்கு 'விஸ்வகர்ம வித்தகன்' எனும் சிறப்புப் பட்டம் வழங்கப்படவுள்ளது.
ஆலய தர்மகர்த்தா சபை செயலாளர் து. பிரதீபன் தலைமையில் இடம்பெறவுள்ள மதிப்பளிப்பு நிகழ்வில், ஆசியுரையை தேவஸ்தான தலைமை குரு சிவஸ்ரீ நாகேந்திர திவாகரக் குருக்களும், வாழ்த்துரையை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை மூத்த விரிவுரையாளர் ஈ. குமரனும், பாராட்டு உரைகளை சிவபூமி அறக்கட்டளை தலைவர், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும் வழங்கவுள்ளனர்.
எதிர்வரும் 14 ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு அன்று தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது. தேர்த் திருவிழா அன்று காலை 10 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகும்.
வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து உள் வீதி வலம் வரும் மருதடி விநாயகப் பெருமான் மதியம் 12 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்குவார்.
தொடர்ந்து தேர் உற்சவம் நடைபெற்று, பிற்பகல் 3 மணிக்கு பச்சை சாத்துதல் இடம்பெறவுள்ளது.
மறுநாள் 15 ஆம் திகதி தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.