இனியபாரதி
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு சிறி சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர்த் திருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் கடாட்சத்தினை பெற்றுக்கொண்டனர்.
அடியவர்கள் அங்கப்பிரதட்டை, கற்பூரசட்டி எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். நாளை தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது.
கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.