வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரத உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கந்தசஷ்டி விரத உற்சவம் தொடர்ந்து ஆறு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக நல்லூர் முருகனில் இடம்பெறவுள்ளது.
தினமும் காலை 9 மணிக்கு சிவலிங்க பூசையும், மு.ப. 10 மணிக்கு காலைச் சந்திப் பூசையும், முற்பகல் 10.15 மணிக்கு வசந்தமண்டபப் பூசையும் நடைபெறவுள்ள அதேவேளை தின மும் பி.ப. 3.45 மணிக்கு சாயரட்சைப் பூசையும், மாலை 4 மணிக்கு 2 ஆம் காலச் சந்திப் பூசையும். மாலை 4.15 மணிக்கு வசந்தமண்டபப் பூசையும் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை மாலை கந்தசஷ்டி விரத காலப் பகுதியின் முக்கியமான உற்சவமான சூரசம்ஹார உற்சவமும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ மும் இடம்பெறவுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.